Parthiban Kanavu by Kalki
1942-ம் ஆண்டு ‘கல்கி’ வார இதழில் கல்கி அவர்கள் எழுதிய முதல் சரித்திரப் புதினம் இந்தப் ‘பார்த்திபன் கனவு ‘. இந்தத் தொடர் கதைக்குத் தமிழக மக்கள் தந்த ஆதரவு மகத்தானது. அதுதான் பின்னர் ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற மகத்தான சரித்திரப் புதினங்கள் கல்கியிடமிகுந்து வருவதற்குக் காரணமானது.
அந்த வகையிலும், கையில் எடுத்தால் கீழே வைக்க இயலாது என்கிற விருவிருப்பைக் கொண்டிருப்பதாலும் ‘பார்த்திபன் கனவு’ தமிழில் ஒரு முக்கியத்துவம் பெற்ற புதினம்!
‘பார்த்திபன் கனவு’ எந்த அளவுக்கு அந்நாட்களில் புகழ் பெற்றிருந்ததென்றால், அந்தக் கதையை உரிமை வாங்கித் திரைப்படமாக்கும் அளவுக்கு. ஆம்… தொடர்கதை வெளியாகிப் பதினெட்டு ஆண்டுகள் கழித்துத் திரைப்படமாக வெளிவந்தது.
1942ம் ஆண்டு ‘கல்கி’ வார இதழில் முதன்முதலாகத் தொடர் கதையாக வந்தபோது ஓவியர் வர்மா வரைந்த அதே ஓவியங்களுடன் பதிப்பித்தால் சிறப்பாக இருக்குமே என்று நினைத்தோம்.
வர்மாவின் ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியங்கள்தான். கறுப்பு, வெள்ளை இரண்டே நிறங்களில் கோட்டை கொத்தளங்களையும், போர்க் காட்சிகளையும் கண்முன் நிறுத்தும் வல்லமை பெற்றவை அவரின் ஓவியங்கள்.
புத்தகத்தினுள் நுழையுங்கள்… கல்கியின் எழுத்தே உங்களை மூன்று பாகங்களையும் ஒரே மூச்சில் படிக்கச் செய்துவிடும்.
The first historical novel written by Kalki in the weekly ‘Kalki’ in the year 1942 was ‘Parthiban Kanavu’. The support given by the people for this serial story is immense.
Kindly share your rating and review about this book on Google by clicking this link Rate Us.
Please do check out other novels by the author in this link Kalki Novels.